Wednesday, June 29, 2005

இட ஒதுக்கீடு தேவையா? - அல்வா சிட்டி ஷம்மிக்கு பதில்.

கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை
பனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).

சில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.
1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.

அல்வா சிட்டி ஷம்மியின் இந்த பதிவிற்கான பதில் இது.

0 comments: