Sunday, January 08, 2006

விளம்பர மாஃபியா

பல விதமான ப்ரக்ருதிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த மரங்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல், வெள்ளம், சாலை அமைப்பது, அணை கட்டுவது என்று பல விதமான வளர்ச்சிப் பணிகள், கொள்ளையர்கள், மரக்கடத்தல்காரர்கள், வெட்டி சாலையில் போட்டு போராட்டம் என்பவர்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர்கள், நகரங்களில் பெரிய விளம்பரப் பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்கள்.

முன்னொரு காலத்தில் 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்பட்ட மரங்கள் நிரம்பிய பெங்களூர் நகருக்கு தான் இந்த நிலைமை. விளம்பரங்களை மறைக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தக் கிளம்பியிருக்கிறார்கள் பெங்களுர் விளம்பர மாஃபியாக்கள். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பேறாமல் தாங்களாகவே இந்த பொதுச்சேவையை நடத்துகிறார்கள். (தள்ள வேண்டியது தள்ளப்பட்டால் மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதி ஒன்றும் பெரிய விஷயமில்லைதான்). இவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

இது தொடர்பான ஆங்கிலப் பதிவொன்றின் சுட்டி.
இதில் மிகத் தெளிவாக படங்களுடன் எங்கே மரங்கள் வெட்டப்பட்டன என விளக்கியிருக்கிறார் அந்தப் பதிவர்.


| | |