Monday, June 16, 2008

உலக சாதனையில் பங்கு கொள்ளுங்கள் !

நாளை (ஜூன் 17, 2008) பயர்பாக்ஸ் தரவிறக்க நாள். உலாவியின் மூன்றாம் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு ஒரே நாளில் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்க மொசில்லா குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை ஒன்றிரண்டு பிரதிகளை (வீடு, அலுவலகம்) தரவிறக்கி உலக சாதனை ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இங்கே சென்று 'தரவிறக்கப் பிரமாணம் ' எடுத்துக் கொள்ளலாம். திறமுலத்திற்கான நம்மாலான சிறு ஆதரவை நாளை தெரிவிப்போம்.



,
,

Saturday, June 14, 2008

கூகிளும் யாஹுவும் கூட்டு.


மைக்ரோசாஃப்டிடம் இருந்து தப்பித்த யாஹு கூகிளிடம் அடைக்கலம் சேர்ந்துவிட்டது.10 வருட ஒப்பந்தம். ஏற்க்கனவே யாஹு ரொம்ப நிறைய இழந்துவிட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த மரியாதையும் இப்போ காலி (!).

யாஹுவின் ஓப்பன் சோர்ஸ் டெவ் குரு ஜெரிமி கிளம்புகிறார். டேட்டா குருவும் கிளம்பிவிட்டார்.ஷேர் நாளுக்கு நாள் இறங்கிகொண்டே இருக்கிறது.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இங்கு அருமையாக பொருந்தும். யாஹு தன்னுடைய பலம் என்ன என்று உணராமலே இருந்தது போல எனக்கு தோண்றுகிரது. இன்னமும் யாஹு வெப் ப்ராபர்டி அருமையான ஒன்று.தேடல் தொழிலை என்றும் யாஹு சரியாக செய்தது கிடையாது.

இருப்பதை விட்டு பறப்பதுக்கு ஆசைப்பட்டால் இதுவே முடிவு என்பது என் கருத்து.

இனி எங்கே செல்லும் யாஹு? கூகிளின் ஒப்பந்தம் யாஹு தேடல் தொழிலை விற்றால் 200 மில்லியனுக்கு மேல் கேட்கும். மைக்ரொசாஃப்ட் இனி எப்படி இதை எதிர்கொள்ள போகிறது என்பது ஒரு அருமையான சினிமாவாக இருக்கும். வழக்கம் போல ஆண்டி- டிரஸ்ட் கம்ப்ளைண்ட். அதற்கு பின்னர் அதன் வசம் இருக்கும் ஆயுதங்கள் என்ன? இப்பொழுதே காசு கொடுத்து தேட சொல்கிறது.

யாஹுவிடம் காசும் இல்லை. சுதந்திரமும் இல்லை. விசுவாசிகளும் இல்லை.

எங்கே செல்லும் இந்த பாதை?

தெரிந்தவர்கள் சொல்லவும்.

Thursday, November 09, 2006

ஈ-பேப்பருங்கோ ஈ-பேப்பர்

தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றன

ஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
டெக்கான் க்ரோனிகிள்

தமிழ்

தினமலர்
தினகரன்
தமிழ்முரசு

தினத்தந்தியும் தினமணியும் இன்னும் களத்தில் இறங்கவில்லை போல.

இந்தியாவின் பல இ-பேப்பர்கள் ப்ரெஸ்ஸ்மார்ட் என்ற இந்திய நிறுவனத்தின் நுட்பத்தையெ பயன்படுத்துகின்றன. ப்ரெஸ்ஸ்மார்ட்டின் தளத்தில் அவர்களின் இந்திய மற்றும் பன்னாட்டு வாடிக்கையாளர்களின் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். சத்தியப்பாதை, E A Water என்று கேள்வியேபடாதவற்றிற்கும் இ-பேப்பர் இருக்கிறது. இந்தியாவில் இத்தனை ஈ-பேப்பர்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.




,
,


Wednesday, May 10, 2006

தினமலரின் தேர்தல் முடிவுகள்

தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:

சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.


இதுல தமிழ் நாடு எங்கப்பா? திடீரென தினமலர் தேசிய (மட்டும்) மலராகிவிட்டதே? ;-)

Update:
இப்போது தினமலருக்கு தமிழ்நாட்டிலும் வாக்குகள் எண்ணப்படுவது நினைவுக்கு வந்து விட்டது..

இப்போதைய 'கடைசி செய்திகள்'

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி
விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி
அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் 23 இடங்கள் வித்தியாசம்
போனால் போகிறதென்று இது..

சேப்பாக்கத்தில் கருணாநிதி வெற்றி



,
,

,

Sunday, February 26, 2006

சன் குழுமத்தின் அடுத்த அதிரடி

தினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.



,
,
,

Sunday, January 08, 2006

விளம்பர மாஃபியா

பல விதமான ப்ரக்ருதிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த மரங்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல், வெள்ளம், சாலை அமைப்பது, அணை கட்டுவது என்று பல விதமான வளர்ச்சிப் பணிகள், கொள்ளையர்கள், மரக்கடத்தல்காரர்கள், வெட்டி சாலையில் போட்டு போராட்டம் என்பவர்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர்கள், நகரங்களில் பெரிய விளம்பரப் பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்கள்.

முன்னொரு காலத்தில் 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்பட்ட மரங்கள் நிரம்பிய பெங்களூர் நகருக்கு தான் இந்த நிலைமை. விளம்பரங்களை மறைக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தக் கிளம்பியிருக்கிறார்கள் பெங்களுர் விளம்பர மாஃபியாக்கள். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பேறாமல் தாங்களாகவே இந்த பொதுச்சேவையை நடத்துகிறார்கள். (தள்ள வேண்டியது தள்ளப்பட்டால் மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதி ஒன்றும் பெரிய விஷயமில்லைதான்). இவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

இது தொடர்பான ஆங்கிலப் பதிவொன்றின் சுட்டி.
இதில் மிகத் தெளிவாக படங்களுடன் எங்கே மரங்கள் வெட்டப்பட்டன என விளக்கியிருக்கிறார் அந்தப் பதிவர்.


| | |

Tuesday, November 15, 2005

சோனி வழி, குறுக்கு வழி.

ரசிகர்கள் தாங்கள் வாங்கும் இசைத்தட்டுக்களை வீட்டில் பிரதியெடுப்பதை தடுக்க, சோனி நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த 'First4Internet' என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போக அது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
இசைத்தட்டுக்களை வாங்குவோர் வீட்டில் பிரதியெடுத்து நண்பர்களுக்கு கொடுப்பது 'Casual Piracy' என்று இசைத்தட்டு நிறுவனங்களால் அழைக்கப்படுகிறது. இணைய தள தரவிறக்கங்கள், P2P வலைப்பின்னல்கள் என்று பலவற்றில் இருந்து இசைத்திருட்டை பெரும்பாலும் ஒழித்துவிட்டு, தற்போது இசைத்தட்டு நிறுவனங்கள் தம் பார்வையை இந்த 'Casual Piracy' மீது திருப்பியிருக்கின்றன.

DRM எனப்படும் டிஜிட்டல் உரிமை மேலாண்மை தொழில்ழுட்பத்திற்கு இப்போது ஏக கிராக்கி. பலரும் பல விதமான நுட்பங்களை பரிசோதித்துக் கொண்டிருக்கின்றனர். தாம் விற்கும் இசைத்தட்டிலேயே DRM நுட்பத்தை நிறுவலாம் என்ற புத்திசாலித்தனமான எண்ணம் சோனிக்குத் தோன்றியது. தங்கள் DRM மென்பொருளை பயனரின் கணிணியில் நிறுவவேண்டும், ஆனால் அது பயனருக்குத் தெரியக்கூடாது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது மேற்கூறிய 'First4Internet' நிறுவனத்தின் நுட்பம். இந்த இசைத்தட்டுக்களை கணிணியில் பாட வைக்கும்போது கணிணி பயனரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தன் மென்பொருளை நிறுவியது சோனி, இது முதல் தவறு. அப்படி நிறுவப்பட்ட மென்பொருள் 'Adware/Spyware/Malware' என்று பல வேர்களைக் கொண்டிருக்கும் குண்டாந்தடி நிறுவன்ங்களின் மென்பொருளைப் போல பயனர் அறியாவண்ணம் ஒளிக்கப்பட்டது. கணிணி ஹாக்கர்களின் இந்த வழிமுறையை கையாண்டு தன் மென்பொருளை நிறுவியது இரண்டாவது இமாலய குற்றம். அப்படி நிறுவிய மென்பொருளை கணிணியிலிருந்து அகற்ற எந்த வழியையும் கொடுக்காதது மூன்றாவது குற்றம். சிஸ் இன்டெர்னல்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் ரஸ்ஸிகோவிக் என்பவரெ இதை முதலில் கண்டுபிடித்தார். தன் கணிணியில் ஒரு 'ரூட்கிட்' (Rootkit, இதை இப்படித்தான் அழைக்கின்றனர்) இருப்பதைக் கண்டு திகைப்படைந்து, பின்னர் இது சோனி இசைதட்டுக்களால் வந்தது என்பதை அறிந்தார். இந்த ரூட்கிட்டுகளை கணிணியிலிருந்து அகற்றுவது மிகக் கடினம். இதை முன்னரே கண்டறிந்த 'F-Trust' என்ற நிறுவனம் சோனியை எச்சரித்தும் சோனி செவிசாய்க்கவில்லை. இது பெரும் பிரச்னையாகி பலத்த எதிர்ப்புக்கு பின்னர், சோனி மெதுவாக, இந்த மென்பொருளை அகற்ற படு சிக்கலானதொரு வழிமுறையை தெரிவித்தது. இது நான்காவது மாபெரும் குற்றம். இதற்குள்ளாக இந்த சோனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வைரஸ் எழுதுபவர்கள் புதிய வைரசையே உருவாக்கிவிட்டனர்.

இந்த ரூட்கிட் நுட்பம் உங்கள் கணிணியில் உள்ள கொப்புக்களை மறைக்க பயன்படும், சோனி தன் மென்பொருளை இது போன்ற நுட்பத்தை கொண்டே மறைத்தது. ஆனால், பிரச்னை என்னவென்றால் இந்த நுட்பம் நிறுவப்பட்டுள்ள கணினியில் சோனி மென்பொருள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் எதைப் போட்டாலும் அதுவும் மறைக்கப்பட்டுவிடும்; அங்கே வைரஸைப் போட்டாலும். இவ்வளவுக்குப் பின்பும், இந்த நிமிடம் வரை சோனியிடமிருந்து எந்த மன்னிப்புக் கோரலும் வரவில்லை. மாறாக, நாங்கள் இதை இசைக்கலைஞர்களின் உரிமையை காப்பாற்றவே செய்தோம் என்று மார்தட்டுகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறர்களாம். சோனியின் இந்த செய்கை பலருக்கும் கடும் எரிச்சலை எற்படுத்தியுள்ளது. இந்த 'ரூட்கிட்' கொண்ட இசைத்தட்டுகளை சோனி திரும்பப் பெறவேண்டும், பாதிக்கப்பட்ட கணிணியிலிருந்து இதை நீக்க எளிமையான வழிமுறையை தர வேண்டும், இந்த செய்கைக்கு மன்னிப்புக் கோர வேண்டும், அதுவரை சோனியின் பொருட்களை புறக்கணிப்போம் என்று கோஷங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்களும், மைக்ரோசாப்டும் சோனியின் இந்த மென்பொருளை 'மால்வேர்' என்று அறிவித்து, தங்கள் மென்பொருட்கள் அதை நீக்கும் என்று அறிவித்துவிட்டன. ஐ-ட்யூன்ஸின் பெருவெற்றியால் கலங்கிப் போய் 'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்று அலைந்து கொண்டிருக்கும் இசைத்தட்டு நிறுவனங்கள் காசு கொடுத்து இசைத்தட்டு வாங்குவோரை இது போல் திருடர்களைப் போல் நடத்துவது சரியான கொடுமை. ஒரிஜினல் இசைத்தட்டு வாங்கினால் வைரஸ் தாக்கும் அபாயம் உண்டென்றால் அதற்கு திருடிவிட்டே போகலாம் என்று எண்ண வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.