Tuesday, December 21, 2004

உண்மையான உண்மை

உண்மையான உண்மை என்பது உண்மையில் எப்போதுமே வெளிவராமலேயே போய் விடுகிறது. இரு நபர்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதாரண உரையாடலில் கூட, இது சாத்தியம். ஒரு உரையாடலின் போது ஒருவர் சொன்ன கருத்தை அவரே மற்றொரு உரையடலின் போது மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினால், மற்றவர் அதை நம்பக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். நிலைமை இவ்வாறிருக்க பலர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உண்மை வெளி வரும் வாய்ப்பு என்பது எவ்வளவு கடினம்? ஊடகங்கள் ஒரு புறம், அரசு ஒரு புறம், காவல் துறை ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் ஒரு புறம், சாட்சிகள் ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேண்டப்பட்டவர்கள் ஒரு புறம் என்று பல புறங்களில் இருந்து வெளியிடும் உண்மைகளில் எந்த உண்மை உண்மையான உண்மை?

உண்மையில் தலை சுற்றிக் கிறு கிறுவென கிறுகிறுத்துப் போகிறது....


0 comments: